மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

'பாட்ஷா, வீரா, சத்யா, அண்ணாமலை' போன்ற வெற்றி படங்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் சின்னத்திரைக்கு திரும்பினார். இப்போது மீண்டும் படம் இயக்கி உள்ளார். அந்த படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன் ஹீரோ, படத்தின் தலைப்பு 'சாருகேசி'. இசை சம்பந்தப்பட்ட கதையான இதில், சத்யராஜ், சமுத்திரகனி, சுஹாசினி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சிந்து பைரவி, சங்கராபரணம் பாணியில் தயாராகிறது. கர்நாடக சங்கீதா பாடகராக ஒய்.ஜி.மகேந்திரன் வருகிறார். இவரின் சாருகேசி என்ற மேடை நாடகமே திரைப்படமாக உருவாகியுள்ளது.
இது குறித்து சுரேஷ்கிருஷ்ணா பேசுகையில், ''ரஜினி சார் இந்த நாடகத்தை பார்த்துவிட்டு படமாக எடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். நானும் அதை சொல்ல, படம் தயாரானது. சாருகேசி நாடகத்தைப் பார்த்ததும் இரண்டு நாட்களில் திரைக்கதை எழுதி விட்டேன், இசையமைப்பாளராக தேவாவை கமிட் செய்தோம். இந்த படத்தில் பாடல் பாடிய சங்கர் மகாதேவனுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். தேவா இசையமைக்க, அடுத்த நிமிடமே பாடல் வரிகளை எழுதிக் கொடுத்தார் பா விஜய். அதே போல வசனமும் சிறப்பாக எழுதியுள்ளார்.
பா விஜய்யை சமுத்திரகனி, சத்யராஜ் என அனைவரும் பாராட்டினர். சத்யராஜ் முதல் முறையாக ஒரு படத்தை பார்த்து அழுதது இதுதான் என்று நினைக்கிறேன். தலைவாசல் விஜய் சிறப்பாக நடித்துள்ளார். ரம்யா பாண்டியன் நடிப்பை அனைவரும் பாராட்டினர். ஒய் ஜி மகேந்திரன் இல்லை என்றால் சாருகேசி என்ற படமே இல்லை. நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வித்தியாசத்தை புரிந்து கொண்டு சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். 75 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக ஞாபக சக்தியுடன் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது'' என்றார்.