சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ரஜினி நடிப்பில் 'அருணாச்சலம்' என்ற படத்தை இயக்கியவர் சுந்தர்.சி. இந்த நிலையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ரஜினி நடிக்கும் 173வது படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. குடும்பப்பாங்கான காமெடி கலந்த கதையில் இப்படம் உருவாகிறது.
இந்த நிலையில் சுந்தர்.சி அளித்துள்ள ஒரு பேட்டியில், அருணாச்சலம் படத்தை அடுத்து மீண்டும் ரஜினியை இயக்கப் போகிறீர்கள். இதேபோன்று அன்பே சிவம் படத்தை அடுத்து கமல்ஹாசனையும் இயக்குவீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ''கமல்ஹாசனின் சலங்கை ஒலி படத்தை பார்த்த பிறகு தான் சினிமாக்கு வர விரும்பினேன். அதே போல் அவர் நடித்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தை பார்த்த பிறகு தான் திரைக்கதை எப்படி எழுத வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.
அப்படி யாரால் சினிமாவுக்கு வந்தேனோ அதே கமல்ஹாசனை வைத்து 'அன்பே சிவம்' என்ற படத்தை இயக்கினேன். இப்போது அவரது தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 173வது படத்தை இயக்குகிறேன். இப்படி மீண்டும் ரஜினி படத்தை இயக்குவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது போன்று மீண்டும் கமலை வைத்து நான் படம் இயக்குவதற்கான வாய்ப்பு அமையலாம். அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது அந்த படத்தையும் மிகச் சிறப்பாக இயக்குவேன் என்று தெரிவித்திருக்கிறார் சுந்தர்.சி. மேலும், ரஜினி 173வது படத்தின் படப்பிடிப்பு 2026 மார்ச்சில் தொடங்கப்பட்டு 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.




