பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நாகசைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வந்த படம் ‛தண்டேல்'. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து தெலுங்கில் நிகில் சித்தார்த்தாவை வைத்து ‛கார்த்திகேயா-2' படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார் சந்து மொண்டேட்டி.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யாவை சந்தித்து தனது அடுத்த படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அவர் சொன்ன கதையை கேட்ட சூர்யா, இன்னும் அந்த படத்திற்கு ஒப்புதல் கொடுக்கவில்லையாம். அப்படி அவர் உடனடியாக கால்ஷீட் கொடுத்தால் முதலில் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கி விட்டு அதன்பிறகுதான் கார்த்திகேயா- 2 படத்தை இயக்குவாராம் சந்து மொண்டேட்டி. மேலும் தற்போது சூர்யா, ‛ரெட்ரோ' படத்தை அடுத்து ஆர்.ஜே .பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.