தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் | துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள் | விஜய் குறித்து நான் அப்படி பேசவில்லை : சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் | துரந்தர் 2 டிரைலர் : 5 மொழிகளில் 65 மில்லியன் பார்வைகள் | 50ஐக் கடந்தது 2026 ரிலீஸ் : இந்த வாரமும் 5 படங்கள் ரிலீஸ் | வெற்றி விழாவுக்கு தயாராகும் தாய்கிழவி படக்குழு |

சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பில் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, அடுத்து ஒரு ஹிந்தி படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ஹைதராபாத் சென்ற அவர் பிரபாஸை சந்தித்தும் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அவரிடத்தில் சில மணி நேரம் அமர்ந்து கதை கேட்ட பிரபாஸ், அந்த கதை தன்னை இம்ப்ரஸ் பண்ணி விட்டதால் கண்டிப்பாக கைவசம் உள்ள படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் கால்ஷீட் தருகிறேன் என்று உறுதி அளித்து இருக்கிறாராம்.
என்றாலும் தற்போது பிரபாஸ், ‛தி ராஜா சாப், ஸ்பிரிட், சலார்-2, கல்கி 2' உள்பட பல படங்களில் அடுத்தடுத்து நடிக்கப்போகிறார். இந்த படங்களில் அவர் நடித்து முடிப்பதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். அதனால் இந்த படங்களில் பிரபாஸ் நடித்து முடித்ததும், ராஜ்குமார் பெரியசாமி அவரை இயக்குவார் என்று கூறப்படுகிறது.




