சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது |

இந்தியாவிலேயே அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும், ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடையவர் மறைந்த கவிஞர் வாலி. 15 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கிறார். அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கருணாநிதி, எம்ஜிஆர் என்ற இரு பெரும் தலைவர்களாலும் நேசிக்கப்பட்டவர். இவர் கடந்த 2013ம் ஆண்டு, தனது 81வது வயதில் காலமானார்.
இந்நிலையில், வாலி பதிப்பகம் சார்பில் அவரின் 94 வது பிறந்தநாள் விழா, நவம்பர் 1ம் தேதி சனிக்கிழமை சென்னையில் கொண்டாடப்படுகிறது. அதில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் பொற்கிழியுடன் வழங்கப்படும் வாலி விருது இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை வழங்கி வாலி குறித்து பேச உள்ளார் இயக்குனர் கே. பாக்யராஜ்.
இந்த விழாவில் திரைப்பட உதவி இயக்குனர் கவிஞர் பதுமை செல்வன் எழுதிய வாலியின் திரைப்பாட்டு முழக்கங்கள் எனும் நூலை திரைப்பட இயக்குனர் லிங்குசாமி வெளியிடுகிறார். மேலும் விழாவில் வாலி பாடல்கள் அடங்கிய திரைப்பட இசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.




