ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 67வது தேசிய விருது பட்டியலில் பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இந்தப்படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி அவார்டும், சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ரசூல் பூக்குட்டிக்கும் என இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இந்த விருது கமிட்டி ஜூரிகளில் ஒருவரான கங்கை அமரன், தமிழ் படங்களுக்கு இத்தனை விருதுகள் கிடைத்தது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் இந்த படங்களை தேர்வுசெய்த தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“இந்தமுறை மற்ற ஜுரிகளிடம் எதற்காகவும் நான் வாதாடவில்லை. சிறந்த நடிகராக தனுஷையும், சிறந்த படமாக அசுரனையும் அவர்களே தேர்வு செய்தனர். பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை பார்த்தவர்கள் ஸ்பெஷல் ஜூரி விருதுக்காக அந்தப்படத்தை தேர்வு செய்தனர். அவருக்கு எந்தப்பிரிவில் இந்த விருதை கொடுக்க போகிறீர்கள் என கேட்டேன்.. நடிப்பு, டைரக்சன், கதை என எல்லா பிரிவிலும் அவரது பங்களிப்பு சிறப்பாகவே இருக்கிறது. அதனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஸ்பெஷல் ஜூரி விருதை கொடுக்கிறோம் என கூறினார்கள்” என்று கூறியுள்ளார் கங்கை அமரன்.