அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 67வது தேசிய விருது பட்டியலில் பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இந்தப்படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி அவார்டும், சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ரசூல் பூக்குட்டிக்கும் என இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இந்த விருது கமிட்டி ஜூரிகளில் ஒருவரான கங்கை அமரன், தமிழ் படங்களுக்கு இத்தனை விருதுகள் கிடைத்தது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் இந்த படங்களை தேர்வுசெய்த தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“இந்தமுறை மற்ற ஜுரிகளிடம் எதற்காகவும் நான் வாதாடவில்லை. சிறந்த நடிகராக தனுஷையும், சிறந்த படமாக அசுரனையும் அவர்களே தேர்வு செய்தனர். பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை பார்த்தவர்கள் ஸ்பெஷல் ஜூரி விருதுக்காக அந்தப்படத்தை தேர்வு செய்தனர். அவருக்கு எந்தப்பிரிவில் இந்த விருதை கொடுக்க போகிறீர்கள் என கேட்டேன்.. நடிப்பு, டைரக்சன், கதை என எல்லா பிரிவிலும் அவரது பங்களிப்பு சிறப்பாகவே இருக்கிறது. அதனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஸ்பெஷல் ஜூரி விருதை கொடுக்கிறோம் என கூறினார்கள்” என்று கூறியுள்ளார் கங்கை அமரன்.