ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு | ராமராஜனை சந்தித்த நடிகை கனகா | தாய் கிழவி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜியோ ஹாட்ஸ்டார் | 'ஜனநாயகன்' வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜன.15ல் விசாரணை? | பராசக்தி படத்திற்கு இப்படி வாழ்த்தினார் ரஜினி : சிவகார்த்திகேயன் | ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் |

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 67வது தேசிய விருது பட்டியலில் பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இந்தப்படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி அவார்டும், சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ரசூல் பூக்குட்டிக்கும் என இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இந்த விருது கமிட்டி ஜூரிகளில் ஒருவரான கங்கை அமரன், தமிழ் படங்களுக்கு இத்தனை விருதுகள் கிடைத்தது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் இந்த படங்களை தேர்வுசெய்த தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“இந்தமுறை மற்ற ஜுரிகளிடம் எதற்காகவும் நான் வாதாடவில்லை. சிறந்த நடிகராக தனுஷையும், சிறந்த படமாக அசுரனையும் அவர்களே தேர்வு செய்தனர். பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை பார்த்தவர்கள் ஸ்பெஷல் ஜூரி விருதுக்காக அந்தப்படத்தை தேர்வு செய்தனர். அவருக்கு எந்தப்பிரிவில் இந்த விருதை கொடுக்க போகிறீர்கள் என கேட்டேன்.. நடிப்பு, டைரக்சன், கதை என எல்லா பிரிவிலும் அவரது பங்களிப்பு சிறப்பாகவே இருக்கிறது. அதனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஸ்பெஷல் ஜூரி விருதை கொடுக்கிறோம் என கூறினார்கள்” என்று கூறியுள்ளார் கங்கை அமரன்.