'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
நேற்றைய தினம் 67வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மலையாளத்தில் உருவாகியுள்ள 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது. மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படம் இனிமேல் தான் ரிலீஸாக இருக்கிறது. இந்த விருது அறிவிப்பினால் மற்ற யாரையும் விட இந்தப்படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் தான் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
காரணம் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு என மேலும் இரண்டு விருதுகள் இந்தப்படத்திற்கு கிடைத்துள்ளன. இதில் இந்தப்படத்திற்கான விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை செய்திருப்பவர் சாட்சாத் பிரியதர்ஷனின் மகன் சித்தார்த் தான். ஆம்.. அமெரிக்கா சென்று விஎப்எக்ஸ் படிப்பை முடித்துவிட்டு வந்த சித்தார்த், நேரடியாக தனது தந்தை இயக்கி வந்த 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தில் விஎஃப்எஸ் சூப்பர்வைசராக பணியாற்றினார். முதல்படமே வரலாற்று நிகழ்வை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் என்பதால் மிகவும் நேர்த்தியாக தனது வேலையை செய்துள்ளார் சித்தார்த்
கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட கேரள அரசு விருதுகள் பட்டியலில் இந்தப்படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளுக்காக சித்தார்த்துக்கு ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவரது பணிக்கு மேலும் கௌரவம் செய்யும் விதமாக, தற்போது தேசிய விருதும் கிடைத்துள்ளது. இதனால் தனது மகன் குறித்து பெருமிதமும் சந்தோஷமும் அடைந்துள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் அவரது மகள் கல்யாணி பிரியதர்ஷனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.