துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓஜி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது அவர் நடித்து வரும் ‛உஸ்தாத் பகத்சிங்' படம் தயாராகி வருகிறது. ஹரிஷ் சங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீலீலா, பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் நடிகர் பார்த்திபன்.
இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்திபனின் பிறந்தநாளான நேற்று வெளியிட்டு உறுதி செய்துள்ளது படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். இதற்கு முன்னதாக 2012ல் ராம்சரண் நடிப்பில் வெளியான ரச்சா என்கிற தெலுங்கு படத்தில் முதல்முறையாக பார்த்திபன் நடித்திருந்தாலும் அது சில நிமிடங்களே வந்து போகும் கவுரவ தோற்றமாக இருந்தது. அந்த வகையில் பவன் கல்யாண் நடிக்கும் படத்திற்காக கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து மீண்டும் தெலுங்கில் நுழைந்துள்ளார் பார்த்திபன்.