பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கமல்ஹாசன் இயக்கி நடித்த ‛விருமாண்டி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபிராமி. அந்த ஒரு படத்திலேயே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றவர் அதன்பிறகு பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் முக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ‛வேட்டையன்' படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்த அவர் மீண்டும் கமலுடன் இணைந்து ‛தக் லைப்' படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‛‛விருமாண்டி படத்தில் நடித்து வந்த சமயத்தில் நான் சைக்காலஜி மற்றும் கம்யூனிகேஷன் கோர்ஸ் படிப்பதற்காக அமெரிக்காவில் ஓகியாவில் இருக்கும் வூஸ்டர் காலேஜில் சேர விரும்பினேன். இங்கிருந்து பிரபலமான ஒருவரின் சிபாரிசு கடிதம் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். பிரபல கதாசிரியரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் எனக்கு ஒரு சிபாரிசு கடிதம் தந்தார்.
அதே சமயம் கமலுடன் விருமாண்டி படப்பிடிப்பில் நடித்து வந்த சமயத்தில் இது பற்றி கூறி அவரிடமும் ஒரு சிபாரிசு கடிதம் கேட்டேன். ஆனால் சிபாரிசு கடிதம் தர முடியாது என கூறியவர், சினிமாவை விட்டு நீ போகக்கூடாது என்றும் உனக்கு இங்கே நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றும் அதற்கு காரணம் கூறினார். ஆனாலும் விருமாண்டி படம் முடிவடைந்த பின்பு எனக்கு அந்த காலேஜில் இருந்து அட்மிஷன் கிடைத்தது. அதனால் படிக்க சென்றுவிட்டேன். இந்த படிப்பு படிக்க வேண்டும் என்பது ஏதோ ஒரு நாளில் எடுத்த முடிவு அல்ல.. பல நாள் கனவு'' என்று கூறியுள்ளார் அபிராமி.