தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
கமல்ஹாசன் இயக்கி நடித்த ‛விருமாண்டி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபிராமி. அந்த ஒரு படத்திலேயே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றவர் அதன்பிறகு பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் முக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ‛வேட்டையன்' படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்த அவர் மீண்டும் கமலுடன் இணைந்து ‛தக் லைப்' படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‛‛விருமாண்டி படத்தில் நடித்து வந்த சமயத்தில் நான் சைக்காலஜி மற்றும் கம்யூனிகேஷன் கோர்ஸ் படிப்பதற்காக அமெரிக்காவில் ஓகியாவில் இருக்கும் வூஸ்டர் காலேஜில் சேர விரும்பினேன். இங்கிருந்து பிரபலமான ஒருவரின் சிபாரிசு கடிதம் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். பிரபல கதாசிரியரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் எனக்கு ஒரு சிபாரிசு கடிதம் தந்தார்.
அதே சமயம் கமலுடன் விருமாண்டி படப்பிடிப்பில் நடித்து வந்த சமயத்தில் இது பற்றி கூறி அவரிடமும் ஒரு சிபாரிசு கடிதம் கேட்டேன். ஆனால் சிபாரிசு கடிதம் தர முடியாது என கூறியவர், சினிமாவை விட்டு நீ போகக்கூடாது என்றும் உனக்கு இங்கே நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றும் அதற்கு காரணம் கூறினார். ஆனாலும் விருமாண்டி படம் முடிவடைந்த பின்பு எனக்கு அந்த காலேஜில் இருந்து அட்மிஷன் கிடைத்தது. அதனால் படிக்க சென்றுவிட்டேன். இந்த படிப்பு படிக்க வேண்டும் என்பது ஏதோ ஒரு நாளில் எடுத்த முடிவு அல்ல.. பல நாள் கனவு'' என்று கூறியுள்ளார் அபிராமி.