சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
1940 மற்றும் 50களில் தமிழ், ஹிந்தி படங்களைத் தயாரித்து, இயக்கி, நடித்து வந்தவர் மும்பையைச் சேர்ந்த பாக்வன். இவரை 'பாக்வன் தாதா' என்றும் சொல்வார்கள். 1940ம் ஆண்டு அவர் இயக்கிய தமிழ் படம்தான் 'ஜயக்கொடி'. இந்த படத்தில் கே.டி.ருக்மணி, கே.நடராஜன் நடித்திருந்தார்கள். பி.வி.சாமி, எஸ்.ஆர்.சாரங்கன் வசனங்களை எழுதினர். அஹமத்துல்லா ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு சி.ராமச்சந்திரா இசை அமைத்தார். பாடல்களை சி.முருகேசன் எழுதினார்.
படத்தின் கதை இதுதான்: வரதட்சணை கொடுக்க முடியாததால் ஏழைப்பெண் ராஜத்துக்கு (ருக்மணி), திருமணமாகவில்லை. இதற்கிடையே பண ஆசை கொண்ட கந்துவட்டிக்காரன், ராஜமின் தந்தையைக் கொன்று வீட்டுக்கு தீ வைக்கிறான். இதனால் ஆவேசம் கொள்ளும் ராஜம், வரதட்சணைக்கு எதிராகக் களமிறங்குகிறாள். வரதட்சணை கேட்கும் மணமகன்கள் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள்.
வரதட்சணையால் பாதிக்கப்பட்ட ராஜம் தனது பெயரை (ஜெ)ஜயக்கொடி என்று மாற்றிக் கொண்டு பெண் தீவிரவாதியாகி வரதட்சணை கேட்கிறவர்களுக்கு தானே தண்டனை தருவதுதான் படத்தின் கதை. பிற்காலத்தில் வந்த 'நான் சிவப்பு மனிதன்', 'சட்டம் ஒரு இருட்டரை' போன்ற படங்களுக்கு இதுதான் முன்னோடி. படத்தின் கதையை பார்த்து மக்கள் மிரண்டு போனார்கள். ருக்மணி அதிரடி ஆக்ஷன் ஹீரோயின் ஆனார். நாயகனாக நடித்த கே.நடராஜன் பின்னர் ஜயக்கொடி நடராஜன் ஆனார்.