மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
இயக்குனர் சிவாவின் தம்பியும் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவருமான நடிகர் பாலா, மலையாள திரை உலகில் தான் அதிக கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் கடந்த 2008ல் இருந்து கிட்டத்தட்ட மூன்று திருமணங்கள் செய்து பின்னர் அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து ஒவ்வொரு முறையும் பரபரப்பு செய்திகளில் அடிபட்டார். இந்த நிலையில் சமீபத்தில் சென்னையை சேர்ந்த தனது உறவு பெண்ணான கோகிலா என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார். இது இன்னும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் பல வருடங்களாக கொச்சியில் வசித்து வரும் பாலா அடுத்ததாக அதை விட்டு தூரமாக ஒரு இடத்திற்கு சென்று வசிக்கப் போவதாக தனது ரசிகர்களிடம் சோசியல் மீடியா மூலமாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்னைப் போலவே எனது மனைவி கோகிலாவுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும். நீண்ட நாட்களாக நான் வாழ்ந்து வந்த கொச்சியை விட்டு வேறு இடம் நோக்கி செல்கிறேன். எனது குடும்பத்திற்காக, எனது உடல்நிலைக்காக நான் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டி இருக்கிறது. என்னை எப்போதுமே ஆதரித்து வந்தவர்கள் என் ரசிகர்களாகிய நீங்கள்.. உங்களிடம் சொல்லாமல் நான் கிளம்ப முடியுமா? விரைவில் இடம் மாறுகிறேன்” என்று கூறியுள்ளார். ஆனால் வேறு எந்த இடத்துக்கு போகிறேன் என பாலா கூறவில்லை.