ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? |
கடந்த சில மாதங்களாகவே நடிகர் பாலா தனது திருமணம் தொடர்பான சர்ச்சைகளில் பரபரப்பான செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். தமிழில் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட சில படங்களின் நடித்த இவர் இயக்குனர் சிவாவின் தம்பியும் கூட. மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பிரிந்து தற்போது நான்காவதுதாக தனது உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் பாலா.
சமீப நாட்களாக இவரது மூன்றாவது மனைவி டாக்டர் எலிசபெத்துக்கும் இவருக்கும் சோசியல் மீடியாவில் வார்த்தை போர் நடந்து வந்து இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை காதலிக்க விரும்பியதாக இன்னொரு புதிய தகவலையும் கூறியுள்ளார் நடிகர் பாலா.
இதுகுறித்து பாலா கூறும்போது, “அமெரிக்காவிலிருந்து இங்கே தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்த பெண் ஒருவர் எனக்கு அறிமுகமானார். பார்ப்பதற்கு நடிகை திரிஷா போலவே இருப்பார். என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் காட்டிய அவர் என்னை பாலா சேட்டா என்று கூப்பிடும் அளவிற்கு வந்துவிட்டார். ஒருமுறை என் வீட்டுக்கு வந்தபோது அவர் என்னிடம் தனது காதலையும் சொன்னார். அப்போது தான் பக்கத்து அறையில் இருந்து கோகிலா வெளியே வந்தார்.
கோகிலாவை அந்த பெண்ணிடம் காட்டி இவருடன் சில மாதங்களாக நான் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். இவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியதும் அந்த பெண் கொஞ்சம் அப்செட் ஆனார். மீண்டும் என்னிடம் ஏதாவது நம் காதலுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டுப் பார்த்தார். ஆனால் நான் கோகிலாவை சுட்டிக்காட்டி இந்த பெண் என்னை அவரது மூன்று வயதில் இருந்து விரும்பி கொண்டிருக்கிறாள். இனி அவள்தான் என் உலகம் என்று கூறியதும் எங்களை வாழ்த்தி விட்டு தன் மனதை தேற்றிக்கொண்டு கிளம்பி சென்றார்” என்று கூறியுள்ளார் பாலா.