ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் என்ற படத்தில் நாயகியாக நடித்து தேசிய விருது பெற்றவர் பிரியா மணி. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பிரியாமணி.
இந்த நேரத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டதால் நான் மதம் மாறிவிட்டதாக சோசியல் மீடியாவில் பலரும் கருத்து கூறி வருகிறார்கள். ஆனால் நான் மதம் மாற மாட்டேன் என்று திருமணத்திற்கு முன்பே என் கணவரிடம் தெரிவித்து விட்டேன். அதனால் இப்போது வரை அவரவர் மத நம்பிக்கையை மதித்து பின்பற்றி வருகிறோம். அதோடு நான் முஸ்லிமை திருமணம் செய்திருப்பதால் எங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று சிலர் கருத்து கூறுகிறார்கள். இது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. காதலித்து ஜாதி, மதத்தை கடந்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் எங்களை பற்றி வெறுப்பு செய்திகளை பரப்பாதீர்கள்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார் பிரியாமணி.