ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

இசையமைப்பாளர் தேவா ஒரு காலகட்டத்தில் முன்னனி இசையமைப்பாளராக வலம் வந்தவர். கடந்த சில வருடங்களாக தேவா இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கொழும்புவில் தேவாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இதில் 'மீசைய முறுக்கு 2' படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதாக கூறியுள்ளார்.
தேவா கூறுகையில், "மீசைய முறுக்கு 2 படத்தில் என்னை தாதாவாக நடிக்கக் கேட்டார்கள். அப்படத்தின் கதை மிக அற்புதமான ஒன்று. அதில் நடிக்காமல் இருந்ததற்குக் காரணத்தையும் நான் கூறினேன். நான் இப்போது இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளேன். சென்னை, பாரீஸ், ஜப்பான் என அடுத்தடுத்து பல இடங்களுக்கு நான் சென்று வருகிறேன். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு என்னால் சரியாக ஒத்துழைப்பு தர முடியாது. நேரத்திற்கு என்னால் படப்பிடிப்பிற்கு செல்ல இயலாது. மேலும், நடிக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. எனக்கு நடிக்க தெரியாது. வசனங்களை எல்லாம் மனப்பாடம் செய்து பேச வேண்டும். ஆனால், நான் மறந்திடுவேன்" என கூறியுள்ளார்.