‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' படத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடித்தனர். அந்தபடம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் இப்போது வரைக்கும் அந்த படம் டாப் டென் தமிழ் சினிமா பட்டியலில் இருக்கிறது. திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு ருத்ரைய்யா ஆரம்பித்த படம் தான் 'ராஜா என்னை மன்னித்துவிடு'. இதனை தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் இயக்க திட்டமிட்டார்.
அண்ணன் ஒரு அகிம்சைவாதி, தம்பி ஒரு நக்சல்வாதி இரண்டு பேருக்கும் இடையிலான விவாதம்தான் படம். இதில் அண்ணனாக சந்திரஹாசனும், தம்பியாக கமல்ஹாசனும் நடிக்க, சுஜாதா கமலின் மனைவியாகவும், சுமலதா காதலியாகவும் நடிக்க தேர்வாகினார்கள். 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் இந்த படம் கைவிடப்பட்டது.
இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்த பாடல்கள் பின்னாளில் வேறு படங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த திரைக்கதையின் பாதிப்பில் தான் பின்னாளில் கமல்ஹாசன் இரண்டு வேறுபட்ட கைதிகளின் உரையாடலாக 'விருமாண்டி' படத்தை எடுத்தார்.