எந்த மாற்றமும் தெரியவில்லை : கீர்த்தி சுரேஷ் | ராம்சரணின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்! | வருகிற மார்ச் 24ம் தேதி நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் திருமணம்! | இது சாமி விஷயம்- நறுக் பதில் கொடுத்த யோகி பாபு! | என்னை வியக்க வைத்த தனுஷ் - சேகர் கம்முலா! | 'நிறம் மாறும் உலகில்' படத்தில் 4 கதைகள் | பிளாஷ்பேக் : ஒரே ஹாலிவுட் படத்தை காப்பி அடித்து உருவான இரண்டு தமிழ் படங்கள் | பிளாஷ்பேக் : சொக்கலிங்கம் 'பாகவதர்' ஆனது இப்படித்தான் | சாய் பல்லவிக்கு கிடைத்த ஆசீர்வாதம்! | இந்தியா பசுமையை இழந்து விட்டதால் நியூசிலாந்தில் 'கண்ணப்பா'வை படமாக்கினோம் : விஷ்ணு மஞ்சு |
ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' படத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடித்தனர். அந்தபடம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் இப்போது வரைக்கும் அந்த படம் டாப் டென் தமிழ் சினிமா பட்டியலில் இருக்கிறது. திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு ருத்ரைய்யா ஆரம்பித்த படம் தான் 'ராஜா என்னை மன்னித்துவிடு'. இதனை தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் இயக்க திட்டமிட்டார்.
அண்ணன் ஒரு அகிம்சைவாதி, தம்பி ஒரு நக்சல்வாதி இரண்டு பேருக்கும் இடையிலான விவாதம்தான் படம். இதில் அண்ணனாக சந்திரஹாசனும், தம்பியாக கமல்ஹாசனும் நடிக்க, சுஜாதா கமலின் மனைவியாகவும், சுமலதா காதலியாகவும் நடிக்க தேர்வாகினார்கள். 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் இந்த படம் கைவிடப்பட்டது.
இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்த பாடல்கள் பின்னாளில் வேறு படங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த திரைக்கதையின் பாதிப்பில் தான் பின்னாளில் கமல்ஹாசன் இரண்டு வேறுபட்ட கைதிகளின் உரையாடலாக 'விருமாண்டி' படத்தை எடுத்தார்.