காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
கமல்ஹாசன் ராஜ் கமல் இன்டர்நேஷனல் என்று தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 'தக் லைப்' படத்தையும், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தையும் தயாரித்து வருகிறது. மேலும் ஏராளமான படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை சில மோசடி நிறுவனங்கள் சினிமா ஆசை கொண்ட அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்காக நடத்துகிறது.
இது குறித்து ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்ட்களையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகளை எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களது ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதி இன்றி பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ராஜ்கமல் நிறுவனத்தின் பெயரில் மோசடி நடந்ததும், இது தொடர்பாக அறிக்கை வெளியானதும் குறிப்பிடத்தக்கது.