பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
கடந்த சில வருடங்களாகவே மலையாள திரை உலகில் நடிகைகள் உள்ளிட்ட பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் புகார்கள் எழுந்தன. கடந்த 2017ல் இது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை கமிஷன் இவை எல்லாம் உண்மைதான் என்று தற்போது வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்பட கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களில் சில ஆண்களும் உடனடியாக இந்த அறிக்கையை வரவேற்று கருத்துக்களை கூறினார் ஆனால் முன்னணி நடிகர்களான மோகன்லால் மம்முட்டி திலீப் உள்ளிட்டோர் இது பற்றி அறிக்கை வெளியிட சில நாட்கள் வரை கருத்து எதுவும் கூறாமல் மவுனம் காத்து வந்தனர்.
மேலும் நடிகர் சங்க தலைவரான மோகன்லால் ஒரு தலைவராக இந்த அறிக்கை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமலேயே தனது பதவியில் இருந்து ராஜினாமாவும் செய்தார். அதேசமயம் மோகன்லாலின் மனைவி சுசித்ராவுக்கு ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அது தொடர்பாக அவருடன் மோகன்லால் சென்னையில் இருந்து சிகிச்சைக்கான பணிகளை கவனித்து வந்தார் என்பதால் இந்த ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து அவர் உடனடியாக பதில் எதுவும் கூறவில்லை என்றும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரும் மலையாள தொழிலாளர் சங்க தலைவருமான இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல தான் ராஜினாமா செய்வது குறித்து முன்கூட்டியே மோகன்லால் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ள இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன், மோகன்லால் உள்ளிட்டோர் பொறுப்புகளில் இருக்கும்போதே இது குறித்து பதில் அளித்து இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் தானும் எதிர்பார்த்ததாக கூறியுள்ளார்.