எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
கடந்த சில நாட்களாகவே மலையாள திரையுலகில் மிகப்பெரிய புயலை கிளப்பி விட்டுள்ளது நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை. கடந்த சில வருடங்களாகவே நடிகைகள் வாய்ப்புக்காக சமரசம் செய்து கொண்டு செல்லுமாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல புகார்களை விசாரித்து அதில் உண்மை இருக்கிறது என்று அந்த விசாரணை கமிஷன் அறிக்கை கூறியுள்ளது. இப்படி ஒரு விசாரணை கமிஷன் அமைப்பதற்கு கேரளா அரசுக்கு அழுத்தம் கொடுத்தது நடிகைகள் ரேவதி, மஞ்சு வாரியர், பார்வதி, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட சில முன்னணி நடிகைகள் ஒன்றாக இணைந்து உருவாக்கிய சினிமா பெண்கள் நல அமைப்பும் (WCC) ஒரு முக்கிய காரணம். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஹேமா கமிஷன் அறிக்கை அந்த அமைப்பின் முயற்சிக்கும் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என்று சொல்லலாம்.
இந்த நிலையில் நடிகை சமந்தா தெலுங்கானா அரசும் இதேபோன்று தன் வசம் உள்ள அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கேரளாவில் சினிமா பெண்கள் நல அமைப்பு எடுத்த முயற்சிக்கு மிகப்பெரிய பாராட்டுகள். அதே பாணியை பின்பற்றி தெலுங்கு திரைப்பட உலகைச் சேர்ந்த எங்களைப் போன்ற பெண்கள் பலரும் கடந்த 2019ல் வாய்ஸ் ஆப் உமன் என்கிற ஒரு அமைப்பு மூலமாக தெலுங்கானா அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம்.
அதன்படி தெலுங்கு திரை உலகில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து நடைபெற்ற உதவி விசாரணை கமிஷன் அறிக்கை ஏற்கனவே தெலுங்கானா அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை தற்போது வெளியிட்டால் அரசும் திரையுலகமும் இங்கு பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சூழல் குறித்து எந்த விதமான முடிவுகளை எடுத்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.
சமந்தா வைத்துள்ள இந்த கோரிக்கையை இன்னும் சிலர் வலுப்படுத்தும் விதமாக ஆதரிக்க துவங்கினால், வரும் சில நாட்களில் தெலுங்கு திரையுலகிலும் மலையாளத்தை போலவே ஒரு மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றே தெரிகிறது.