காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியாவுக்கு மூன்று வெண்கலம் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் 50 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை வினேஷ் போகத் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தார். அதனால் இந்தியாவுக்கான 50 கிலோ எடை பிரிவில் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் கண்டிப்பாக தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கூடுதல் எடை காரணமாக வினேஷ் போகத்தை ஒலிம்பிக் குழுவினர் தகுதி நீக்க செய்தார்கள். இது ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிரவிட்டது. இதையடுத்து வினேஷ் போகத் கீழே விழுந்து அழுத புகைப்படங்கள் வெளியானது. அதைப்பார்த்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் அவருக்கு ஆறுதலாக பதிவு வெளியிட்ட நிலையில், பல சினிமா பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாராவும் தனது சோசியல் மீடியாவில் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், தலை நிமிர்ந்து நடந்து வாருங்கள் போராளியே . உங்களுடைய மதிப்பு வெற்றிகளால் அழைக்கப்படுவது அல்ல. சாதனைகளை எல்லாம் முறியடிப்பதற்கான அன்பை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்று கூறி இருக்கிறார் நயன்தாரா.