எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியாவுக்கு மூன்று வெண்கலம் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் 50 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை வினேஷ் போகத் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தார். அதனால் இந்தியாவுக்கான 50 கிலோ எடை பிரிவில் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் கண்டிப்பாக தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கூடுதல் எடை காரணமாக வினேஷ் போகத்தை ஒலிம்பிக் குழுவினர் தகுதி நீக்க செய்தார்கள். இது ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிரவிட்டது. இதையடுத்து வினேஷ் போகத் கீழே விழுந்து அழுத புகைப்படங்கள் வெளியானது. அதைப்பார்த்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் அவருக்கு ஆறுதலாக பதிவு வெளியிட்ட நிலையில், பல சினிமா பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாராவும் தனது சோசியல் மீடியாவில் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், தலை நிமிர்ந்து நடந்து வாருங்கள் போராளியே . உங்களுடைய மதிப்பு வெற்றிகளால் அழைக்கப்படுவது அல்ல. சாதனைகளை எல்லாம் முறியடிப்பதற்கான அன்பை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்று கூறி இருக்கிறார் நயன்தாரா.