மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு |

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியாவுக்கு மூன்று வெண்கலம் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் 50 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை வினேஷ் போகத் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தார். அதனால் இந்தியாவுக்கான 50 கிலோ எடை பிரிவில் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் கண்டிப்பாக தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கூடுதல் எடை காரணமாக வினேஷ் போகத்தை ஒலிம்பிக் குழுவினர் தகுதி நீக்க செய்தார்கள். இது ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிரவிட்டது. இதையடுத்து வினேஷ் போகத் கீழே விழுந்து அழுத புகைப்படங்கள் வெளியானது. அதைப்பார்த்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் அவருக்கு ஆறுதலாக பதிவு வெளியிட்ட நிலையில், பல சினிமா பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாராவும் தனது சோசியல் மீடியாவில் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், தலை நிமிர்ந்து நடந்து வாருங்கள் போராளியே . உங்களுடைய மதிப்பு வெற்றிகளால் அழைக்கப்படுவது அல்ல. சாதனைகளை எல்லாம் முறியடிப்பதற்கான அன்பை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்று கூறி இருக்கிறார் நயன்தாரா.




