‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
மார்க் ஆண்டனி படத்தை அடுத்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி என்ற படத்தை இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும் மீண்டும் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப் போகிறது. மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடித்துள்ள திரிஷாவும் குட் பேட் அக்லியில் இணைந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் த்ரிஷா, லீலா என இரண்டு நடிகைகள் நடிப்பது தெரியவந்துள்ளது. மேலும் விஜய்யுடன் லியோ படத்தை அடுத்து கோட் படத்திலும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ள திரிஷா, இப்போது அஜித்துடனும் விடாமுயற்சியை தொடர்ந்து குட் பேட் அக்லியிலும் நடிக்கப் போகிறார்.