‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
நடிகர் பஹத் பாசில் தனது 42வது பிறந்த நாளில் தற்போது அடி எடுத்து வைத்துள்ளார். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும் அவரது ரசிகர்களும் சோசியல் மீடியா மூலமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி அவரை அன்பால் திக்கு முக்காட வைத்து விட்டனர். அது மட்டுமல்ல அவர் தற்போது நடித்து வரும் புஷ்பா 2, மாரீசன் மற்றும் வேட்டையன் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் தனியாக பிறந்தநாள் போஸ்டர் வெளியிட்டு பஹத் பாசிலுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தன.
அந்த வகையில் இந்த மூன்று படங்களில் வேட்டையன் படத்தில் யாருக்கும் எளிதில் கிடைத்திடாத அரிய வாய்ப்பான இந்தியாவின் இரண்டு சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவருடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு பஹத் பாசிலுக்கு கிடைத்துள்ளது. இந்த இருவருடனும் படப்பிடிப்பு தளத்தில் இணைந்து பஹத் பாசியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை லைகா நிறுவனம் அவரது பிறந்தநாள் பரிசாக வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து படம் முழுக்க பயணிக்கும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.