‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அங்கிருந்த சில கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட மனிதர்கள் மண்ணில் புதைந்தும் இடிபாடுகளில் சிக்கியும் பலியாகினர். பல நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டம் ஆகிவிட்டன.
கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்ப பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற அளவு உதவித்தொகையை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் இந்த வயநாடு நிலச்சரிவு பாதிப்பு நிதியாக தானும் தனது மகன் ராம்சரணும் இணைந்து ஒரு கோடி ரூபாய் முதல் கட்ட தொகையாக வழங்குவதாக இரண்டு தினங்களுக்கு முன் நடிகர் சிரஞ்சீவி அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று தனி விமான மூலம் நேரடியாகவே திருவனந்தபுரம் வந்து கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார். கேரளாவில் ஏற்பட்ட பாதிப்பிற்காக இப்படி ஆந்திராவில் இருந்து சிரஞ்சீவி நேரில் வந்து உதவித்தொகை வழங்கியுள்ளது கேரள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.