தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அங்கிருந்த சில கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட மனிதர்கள் மண்ணில் புதைந்தும் இடிபாடுகளில் சிக்கியும் பலியாகினர். பல நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டம் ஆகிவிட்டன.
கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்ப பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற அளவு உதவித்தொகையை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் இந்த வயநாடு நிலச்சரிவு பாதிப்பு நிதியாக தானும் தனது மகன் ராம்சரணும் இணைந்து ஒரு கோடி ரூபாய் முதல் கட்ட தொகையாக வழங்குவதாக இரண்டு தினங்களுக்கு முன் நடிகர் சிரஞ்சீவி அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று தனி விமான மூலம் நேரடியாகவே திருவனந்தபுரம் வந்து கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார். கேரளாவில் ஏற்பட்ட பாதிப்பிற்காக இப்படி ஆந்திராவில் இருந்து சிரஞ்சீவி நேரில் வந்து உதவித்தொகை வழங்கியுள்ளது கேரள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.