இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் | விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை |
கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றி மூலம் தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட் வரை வியக்க வைத்தவர் கன்னட நடிகர் யஷ். கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நடிகையும் தேசிய விருதுபெற்ற மலையாள இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்க உள்ள டாக்ஸிக் என்கிற படத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார் யஷ். இது குறித்து அறிவிப்பு கடந்து சில மாதங்களுக்கு முன்பே வெளியானாலும் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் நாளை (ஆகஸ்ட் 8) இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் துவங்க உள்ளது. காரணம் 8 என்பது யஷ்ஷின் ராசியான எண். அது மட்டுமல்ல நாளைய தேதி 8 8 2024 என்பது இரண்டு எட்டுகள் சேர்ந்து வருவதால் அந்த தேதியில் படப்பிடிப்பை சென்டிமென்டாக துவங்கினால் நன்றாக இருக்கும் என யஷ் விரும்பியதால் நாளை முதல் படப்பிடிப்பு துவங்குகிறது என்று சொல்லப்படுகிறது. இதை அடுத்து கடந்த சில நாட்களாக தர்மஸ்தலா கோவில், சூரிய ஸ்ரீ சதாசிவ ருத்ர கோவில் என தனது குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார் யஷ்.