இன்னும் 4 வாரம் தேவை: ஜனநாயகன் சென்சார் வழக்கில் தணிக்கை வாரியம் வாதம் | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி | கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா | இங்கு மட்டுமல்ல சவுதியிலும் 'ஜனநாயகன்' வெளியாவதில் சென்சார் சிக்கல் | தமிழில் கவனம் செலுத்தும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் | சிரஞ்சீவி பட இயக்குனருக்கு மோகன்லால் கொடுத்த அதிர்ச்சி | சிவகார்த்திகேயன் திரையிலும், நிஜத்திலும் என் சகோதரர் : அதர்வா நெகிழ்ச்சி | 'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? |

தமிழ் சினிமாவை போலவே மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் தங்களுக்கென சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்குவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல நடிகர்கள் தங்களது சொந்த தயாரிப்பில் நடித்தாலும் பெரும்பாலான ஹீரோக்கள் தங்களது நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்துவதற்காகவே இப்படி பட தயாரிப்பில் ஈடுபடுவது தான் அதிகம். அந்த வகையில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்ட நடிகர் டொவினோ தாமஸ் தற்போது படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார். முதன்முறையாக அவர் தயாரிக்கும் படத்திற்கு மரண மாஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிவபிரசாத் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இது ஒரு மாஸ் படம் அல்ல என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார் டொவினோ தாமஸ். இவர் நடித்த மின்னல் மின்னல் முரளி என்கிற சூப்பர் ஹீரோ படத்தை இயக்கிய இயக்குனர் பஷில் ஜோசப் தான் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரித்விராஜுடன் இவர் இணைந்து நடித்த குருவாயூர் அம்பல நடையில் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக பஷில் ஜோசப் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள நுனக்குழி என்கிற படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் தான் நஸ்ரியாவுடன் இவர் இணைந்து நடித்து வரும் சூட்சும தர்ஷினி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் தற்போது மரண மாஸ் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அனேகமாக இன்னும் சில வருடங்களுக்கு டைரக்ஷன் பக்கம் பஷில் ஜோசப் திரும்பிப் பார்க்க மாட்டார் என்று சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.