எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றி மூலம் தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட் வரை வியக்க வைத்தவர் கன்னட நடிகர் யஷ். கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நடிகையும் தேசிய விருதுபெற்ற மலையாள இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்க உள்ள டாக்ஸிக் என்கிற படத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார் யஷ். இது குறித்து அறிவிப்பு கடந்து சில மாதங்களுக்கு முன்பே வெளியானாலும் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் நாளை (ஆகஸ்ட் 8) இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் துவங்க உள்ளது. காரணம் 8 என்பது யஷ்ஷின் ராசியான எண். அது மட்டுமல்ல நாளைய தேதி 8 8 2024 என்பது இரண்டு எட்டுகள் சேர்ந்து வருவதால் அந்த தேதியில் படப்பிடிப்பை சென்டிமென்டாக துவங்கினால் நன்றாக இருக்கும் என யஷ் விரும்பியதால் நாளை முதல் படப்பிடிப்பு துவங்குகிறது என்று சொல்லப்படுகிறது. இதை அடுத்து கடந்த சில நாட்களாக தர்மஸ்தலா கோவில், சூரிய ஸ்ரீ சதாசிவ ருத்ர கோவில் என தனது குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார் யஷ்.