ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றி மூலம் தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட் வரை வியக்க வைத்தவர் கன்னட நடிகர் யஷ். கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நடிகையும் தேசிய விருதுபெற்ற மலையாள இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்க உள்ள டாக்ஸிக் என்கிற படத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார் யஷ். இது குறித்து அறிவிப்பு கடந்து சில மாதங்களுக்கு முன்பே வெளியானாலும் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் நாளை (ஆகஸ்ட் 8) இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் துவங்க உள்ளது. காரணம் 8 என்பது யஷ்ஷின் ராசியான எண். அது மட்டுமல்ல நாளைய தேதி 8 8 2024 என்பது இரண்டு எட்டுகள் சேர்ந்து வருவதால் அந்த தேதியில் படப்பிடிப்பை சென்டிமென்டாக துவங்கினால் நன்றாக இருக்கும் என யஷ் விரும்பியதால் நாளை முதல் படப்பிடிப்பு துவங்குகிறது என்று சொல்லப்படுகிறது. இதை அடுத்து கடந்த சில நாட்களாக தர்மஸ்தலா கோவில், சூரிய ஸ்ரீ சதாசிவ ருத்ர கோவில் என தனது குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார் யஷ்.