'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. அவரது தாய்மொழியான மலையாளத்தை விட தமிழில்தான் அதிகப் படங்களில் நடித்துள்ளார். அவரது 75வது படமாக 'அன்னபூரணி' படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 1ம் தேதி வெளியானது. அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, சத்யராஜ், ஜெய் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வெளியீட்டிற்கு முன்பு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் தியேட்டர் வெளியீட்டில் தோல்வியைத் தழுவியது. அதன்பின் கடந்த வருடக் கடைசியில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், படத்தில் இடம் பெற்ற ஒரு வசனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமர் அசைவ உணவு சாப்பிட்டார்,” என்று படத்தில் இடம் பெற்ற வசனம்தான் அந்த சர்ச்சைக்குக் காரணம். தொடர்ந்து ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக படக்குழுவினர் மீது வழக்குகளும் தொடுக்கப்பட்டது. அடுத்து நடிகை நயன்தாராவும் அது குறித்து மன்னிப்பு கேட்டார். அதனால், அப்படத்தை தனது தளத்திலிருந்து நீக்கியது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.
இதனிடையே, 'அன்னபூரணி' படம் இந்தியா தவிர மற்ற வெளிநாடுகளில் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் தங்களது ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியாக உள்ளதாக 'சிம்ப்ளி சவுத்' என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.