‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. அவரது தாய்மொழியான மலையாளத்தை விட தமிழில்தான் அதிகப் படங்களில் நடித்துள்ளார். அவரது 75வது படமாக 'அன்னபூரணி' படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 1ம் தேதி வெளியானது. அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, சத்யராஜ், ஜெய் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வெளியீட்டிற்கு முன்பு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் தியேட்டர் வெளியீட்டில் தோல்வியைத் தழுவியது. அதன்பின் கடந்த வருடக் கடைசியில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், படத்தில் இடம் பெற்ற ஒரு வசனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமர் அசைவ உணவு சாப்பிட்டார்,” என்று படத்தில் இடம் பெற்ற வசனம்தான் அந்த சர்ச்சைக்குக் காரணம். தொடர்ந்து ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக படக்குழுவினர் மீது வழக்குகளும் தொடுக்கப்பட்டது. அடுத்து நடிகை நயன்தாராவும் அது குறித்து மன்னிப்பு கேட்டார். அதனால், அப்படத்தை தனது தளத்திலிருந்து நீக்கியது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.
இதனிடையே, 'அன்னபூரணி' படம் இந்தியா தவிர மற்ற வெளிநாடுகளில் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் தங்களது ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியாக உள்ளதாக 'சிம்ப்ளி சவுத்' என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.