எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சின்னத்திரையில் அனைத்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வரும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் சின்னத்திரை விருது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சின்னத்திரை 2023ம் ஆண்டிற்கான விருது விழா அண்மையில் தான் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சிறந்த தொலைக்காட்சி தொடருக்கான விருதை எதிர்நீச்சல் தொடர் பெற்றுள்ளது.
இதனையடுத்து விருதை பெற்றுக்கொண்ட இயக்குநர் திருச்செல்வம், 'எல்லோருடைய வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது தான் எதிர்நீச்சல். கோலங்கள் தொடருக்கு பின் எனக்கு இந்த வாய்ப்பையும், சுதந்திரத்தையும் கொடுத்த தொலைக்காட்சிக்கு நன்றி. இந்த தொடர் இவ்வளவு பெரிய இடத்தை பிடிக்க காரணம் இந்த தொடருக்கு வசனம் எழுதிய ஸ்ரீவித்யா தான்' என கூறினார். அதன்பிறகு தொகுப்பாளர் அர்ச்சனா எதிர்நீச்சல் 2 வருமா? என கேட்க, அதற்கு பதிலளித்த திருச்செல்வம் 'எதிர்நீச்சல் எப்பொழுதும் வரும், எப்பொழுதும் இருக்கும்' என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.