விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். நடிகர் சங்க செயலாளராக இருக்கும் இவர், கடந்த 2017-19 காலக்கட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இந்த காலக்கட்டத்தில் சங்கத்தில் இருந்த ரூ.12 கோடி நிதியை முறைகேடாக செலவழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக அந்த தொகையை அவர் திருப்பி தர சொல்லி தற்போதைய சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் பலமுறை தெரியப்படுத்தி உள்ளனர். ஆனால் விஷால் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால், இனி விஷாலை வைத்து புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து அதன்பின் தங்களது பணிகளை துவங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்த முடிவை எடுத்துள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.