ஆக., 23ல் சூரியின் ‛கொட்டுக்காளி' ரிலீஸ் | சூர்யா 44 பிறந்தநாள் வீடியோ - 'புகையை' விட மறுக்கும் தமிழ் சினிமா ஹீரோக்கள் | ஹிந்தியில் ரூ.300 கோடி வசூலைக் கடக்குமா 'கல்கி 2898 ஏடி'? | 500 நடன கலைஞர்களுடன் வேட்டையன் படத்தில் ஒரு பாடல்! | தனுஷ் இயக்கத்தில் நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் | சூர்யாவிற்கு வில்லனாகும் கார்த்தி | நயன்தாரா ஜோடி, அன்று ஜெய்... இன்று கவின்... : பொங்கும் ரசிகர்கள் | 'ப்ளூ ஸ்டோரி' ஆக மாறுகிறதா 'எல்ஐசி' படத் தலைப்பு? | பிளாஷ்பேக் : கலையுலகில் கற்பகத்தால் உச்சம் தொட்ட காவியக் கவிஞர் வாலி | சினிமா துறைக்குள் அரசு ஏன் வர வேண்டும்? - விஷால் கேள்வி |
சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் மற்றும் பலர் நடிப்பில் 2018ல் வெளிவந்த படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. அந்தப் படத்தில் அரவிந்த்சாமிக்கான சம்பளத்தில் தர வேண்டிய பாக்கித் தொகை 30 லட்சம், வருமான வரித்துறைக்கு தயாரிப்பாளர் செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகை 27 லட்சம், பெற்ற கடன் தொகை 35 லட்ச ரூபாய் ஆகியவற்றைத் தயாரிப்பாளர் அளிக்கவில்லை என அரவிந்த்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தயாரிப்பாளர் முருகன் குமாரைக் கைது செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் வழக்கை ஜுலை 8ம் தேதிக்கு தள்ளி வைத்தார். நேற்று மீண்டும் நடைபெற்ற விசாரணையில் அரவிந்த்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தயாரிப்பாளர் எங்களிடம் தீர்வுக்காக அணுகியுள்ளார். நீங்கள் எங்களுக்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும். அதைத் தீர்க்க முடிகிறதா என்று பார்ப்போம்,” என்று நீதிபதியிடம் கேட்டார்.
அவரது கோரிக்கைக்கு சம்மதித்த நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.