விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
நடிகர் மோகன்லால் தற்போது மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 'எம்புரான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னொரு பக்கம் இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் தனது 360வது படத்திலும் நடித்து வருகிறார் மோகன்லால். இந்த படத்தில் நீண்ட நாளைக்கு பிறகு அவருடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகை ஷோபனா. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்திற்கு அருகில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் மோகன்லாலின் தீவிரமான ரசிகை. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சென்ற அவருக்கு அதிர்ஷ்டவசமாக மோகன்லாலுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது மோகன்லாலிடம் “படம் முடிஞ்சதா மகனே?” என்று கேட்டுள்ளார். அதற்கு மோகன்லால், “ஏன்.. எங்களை எங்கிருந்து வேகமாக அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று வேடிக்கையாக கேட்டுள்ளார்.
அதன் பிறகு அந்த மூதாட்டி, “எங்க வீட்டிற்கு சாப்பிட வருகிறீர்களா?” என்று கேட்க, “எனக்கு ஸ்பெஷலாக என்ன தருவீர்கள்?” என்று மோகன்லால் கேட்டதும் “வாத்து கறி சமைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார். நிச்சயமாக வருகிறேன் என்று கூறி அந்த மூதாட்டியின் தோள்மேல் கை போட்டபடி மோகன்லால் தனது குழுவினருடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.