25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப், கமல் மற்றும் பலர் நடிக்கும் 'கல்கி 2898 ஏடி' படம் அடுத்த வாரம் ஜுன் 27ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் கட்டணங்களை அதிகமாக உயர்த்திக் கொள்ள தெலுங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி அதிகாலை 5.30 மணி சிறப்புக் காட்சிகளுக்கு சிங்கிள் தியேட்டர்களில் 377 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 495 ரூபாயும் கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. 3டி கண்ணாடிகளுக்கான கட்டணம் தனி. படம் வெளியாகும் முதல் நாளில் 6 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற காட்சிகளுக்கான கட்டணங்களில் சிங்கிள் தியேட்டர்களுக்கான கட்டணம் அதிகபட்சமாக 265 ரூபாய், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கான கட்டணம் 413 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிங்கிள் தியேட்டர்களுக்கு 75 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு 100 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில அரசின் டிக்கெட் கட்டணம் பற்றிய அரசு அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அங்கும் டிக்கெட் கட்டணம் இப்படத்திற்காக உயர்த்தப்படலாம்.
'கல்கி 2898 ஏடி' படம் உலகம் முழுவதுமாக சேர்த்து சுமார் 385 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டண உயர்வால் தெலுங்கில் இப்படத்தின் வசூல் அதிகமாக வாய்ப்புள்ளது.