காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
நடிகர் மோகன்லால் தற்போது மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 'எம்புரான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னொரு பக்கம் இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் தனது 360வது படத்திலும் நடித்து வருகிறார் மோகன்லால். இந்த படத்தில் நீண்ட நாளைக்கு பிறகு அவருடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகை ஷோபனா. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்திற்கு அருகில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் மோகன்லாலின் தீவிரமான ரசிகை. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சென்ற அவருக்கு அதிர்ஷ்டவசமாக மோகன்லாலுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது மோகன்லாலிடம் “படம் முடிஞ்சதா மகனே?” என்று கேட்டுள்ளார். அதற்கு மோகன்லால், “ஏன்.. எங்களை எங்கிருந்து வேகமாக அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று வேடிக்கையாக கேட்டுள்ளார்.
அதன் பிறகு அந்த மூதாட்டி, “எங்க வீட்டிற்கு சாப்பிட வருகிறீர்களா?” என்று கேட்க, “எனக்கு ஸ்பெஷலாக என்ன தருவீர்கள்?” என்று மோகன்லால் கேட்டதும் “வாத்து கறி சமைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார். நிச்சயமாக வருகிறேன் என்று கூறி அந்த மூதாட்டியின் தோள்மேல் கை போட்டபடி மோகன்லால் தனது குழுவினருடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.