என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் மீடியாக்களில் பரபரப்பாக வலம் வர ஆரம்பித்துள்ளார் நடிகர் ராணா டகுபதி. இன்னொரு பக்கம் ஹிந்தியில் ஆலியா பட் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான ஜிக்ரா திரைப்படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை ராணா தான் பெற்றிருந்தார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்வுகளை தடபுடலாகவும் நடத்தினார் ராணா. அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இது அவர் ராணாவின் மீது கொண்ட அன்பு காரணமாகத்தான்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த சமந்தாவை ராணா அன்பாக அரவணைத்து அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் தங்களது அன்பான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ராணாவின் திருமணத்தின் போது நடிகை சமந்தா ஒரு சகோதரியாக நின்று அந்த திருமணத்தில் செய்ய வேண்டிய வேலைகளை கவனித்தார் என்றும், தொடர்ந்து ராணா வெளியிடும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு தனது பங்களிப்பை தந்து வருகிறார் என்றும் இது போன்று ஒரு சகோதரியைப் பெற ராணா நிச்சயம் தகுதியானவர் என்றும் இவர்களது சகோதரத்துவத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.