கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் மீடியாக்களில் பரபரப்பாக வலம் வர ஆரம்பித்துள்ளார் நடிகர் ராணா டகுபதி. இன்னொரு பக்கம் ஹிந்தியில் ஆலியா பட் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான ஜிக்ரா திரைப்படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை ராணா தான் பெற்றிருந்தார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்வுகளை தடபுடலாகவும் நடத்தினார் ராணா. அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இது அவர் ராணாவின் மீது கொண்ட அன்பு காரணமாகத்தான்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த சமந்தாவை ராணா அன்பாக அரவணைத்து அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் தங்களது அன்பான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ராணாவின் திருமணத்தின் போது நடிகை சமந்தா ஒரு சகோதரியாக நின்று அந்த திருமணத்தில் செய்ய வேண்டிய வேலைகளை கவனித்தார் என்றும், தொடர்ந்து ராணா வெளியிடும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு தனது பங்களிப்பை தந்து வருகிறார் என்றும் இது போன்று ஒரு சகோதரியைப் பெற ராணா நிச்சயம் தகுதியானவர் என்றும் இவர்களது சகோதரத்துவத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.