ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை |
ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. வெளியான தினத்தில் இருந்தே பாசிடிவான விமர்சனங்களை பெற்று ஒரு வெற்றிப் படமாக மாறியுள்ளது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் ரஜினிக்கு அடுத்தபடியாக அனைவரையும் கவர்ந்தவர் என்றால் அது பஹத் பாசில் தான். படம் பார்த்து விட்டு வரும் அனைவருமே தவறாமல் பஹத்தின் நடிப்பு பற்றி குறிப்பிட்டு பாராட்டி வருகிறார்கள். ரஜினிக்கும் அவருக்குமான காட்சிகள் அனைத்துமே நகைச்சுவையாகவும் போரடிக்காத விதமாகவும் உருவாக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இந்த படத்தில் நீளம் காரணமாக தூக்கப்பட்ட, தியேட்டரில் இடம் பெறாத பஹத் பாசில் நடித்த காட்சி ஒன்றை தயாரிப்பு நிறுவனம் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளது. அதில் போலீஸ் அதிகாரியான ரித்திகா சிங்கிடம் சாப்பாடு ஆர்டர் பண்ணுங்க மேடம் என பஹத் சொல்ல, இந்த சூழலில் உனக்கு மட்டும் எப்படி பசிக்குது என பதிலுக்கு கோபமாக கேட்கிறார் ரித்திகா சிங். அதற்கு, “மேடம் இந்த பசி, பட்டினி, தூக்கம், இருமல், விக்கல், பணம் இதெல்லாம் எப்ப வரும்னு தெரியாது எப்ப போகும்னும் தெரியாது.. எச்சச்ச எச்சச்ச கெச்சச்ச கெச்சச்ச” என்று முத்து படத்தில் ரஜினி பேசி ஹிட்டான வசனத்தை ரித்திகாவிற்கு பதிலாக கொடுக்கிறார் பஹத் பாசில்.
இந்த காட்சியை இப்போது பார்த்து ரசித்து வரும் ரசிகர்கள் பலரும், இதை படத்தில் வைத்திருந்தால் தியேட்டரில் விசில் பறந்திருக்குமே இதை ஏனய்யா நீக்கினீர்கள் என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.