‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
மலையாள திரையுலகில் ராணுவ சம்பந்தப்பட்ட படங்களாக இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் மேஜர் ரவி. ராணுவ அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தொடர்ந்து ராணுவ கதை அம்சம் கொண்ட படங்களாக இயக்கி வந்தார். அதில் கீர்த்தி சக்ரா, குருசேத்ரா, காந்தஹார், கர்ம யோதா என பெரும்பாலும் மோகன்லாலை வைத்தே அதிக படங்களை இயக்கியுள்ளார். பிரித்விராஜை வைத்து இதே ராணுவ பின்னணியில் பிக்கெட் 43 என்கிற ஹிட் படத்தை கொடுத்த அவர் அதன் பிறகு மோகன்லால் இரண்டு வேடங்களில் நடித்த 1971 : பியாண்ட் பார்டர்ஸ் என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அதன் பிறகு டைரக்ஷனுக்கு இடைவெளி விட்ட அவர் ஒரு நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பியுள்ள மேஜர் ரவி ஆபரேஷன் ராஹத் என மீண்டும் ஒரு ராணுவ பின்னணி கொண்ட உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையை இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் சரத்குமார் நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது போஸ்டருடன் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள சரத்குமார் கிட்டத்தட்ட 10 வருட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வெளியான கிறிஸ்டோபர் மற்றும் திலீப் நடித்த பாந்த்ரா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் தயாராகும் ஆபரேஷன் ராஹத் படத்தில் கதாநாயகனாகவே நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.