Advertisement

சிறப்புச்செய்திகள்

வசூல் சாதனை படைக்குமா 'கல்கி 2898 ஏடி' ? | தனி விமானத்தில் பேச்சுலர் பார்ட்டி நடத்திய எமி ஜாக்சன் | நேசிப்பாயா : ஆகாஷ் முரளி பட டைட்டில் அறிவிப்பு | ஜோடி பொருத்தம் பிரமாதம் : சித்தார்த் - அதிதியை வாழ்த்திய ரேகா | படத்திற்கு படம் எனது வேடத்தில் ஒரு தாக்கத்தை கொடுக்க விரும்புகிறேன் : ஷர்வரி | 4 வருடம் காத்திருந்து தன்மீதே நம்பிக்கை வந்ததும் நடிக்க சம்மதித்த பார்வதி | உன்னி முகுந்தன் படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் திலகனின் பேரன் | ஐடென்டிடி படப்பிடிப்பை நிறைவு செய்த வினய் ராய் | நாகார்ஜூனாவை தொடர்ந்து தனுஷின் பாடிகார்டும் ரசிகரை தள்ளிவிட்டார் | 106 வயது 'இந்தியன்' தாத்தா : இயக்குனர் ஷங்கர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகரின் மனைவியிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு காந்தாரா நாயகி வழக்கு

17 ஜூன், 2024 - 01:38 IST
எழுத்தின் அளவு:
Kantara-heroine-sues-actors-wife-for-compensation-of-10-crores

கடந்த சில நாட்களுக்கு முன் கன்னட திரையுலகின் பிரபல மறைந்த மூத்த நடிகர் ராஜகுமாரின் பேரனும், சமீபத்தில் வெளியான யுவா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவருமான நடிகர் யுவ ராஜ்குமார் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். முதல் படம் வெளியான நிலையிலேயே இப்படி கதாநாயகியுடன் இணைத்து பேசப்பட்டதும் தனது மனைவியை விவாகரத்து செய்ய அவர் விண்ணப்பித்ததும் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பதிலடியாக அவரது மனைவி ஸ்ரீதேவி பைரப்பா தானும் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.

மேலும் நன்றாக சென்று கொண்டிருந்த தங்களது குடும்ப வாழ்க்கையில் கடந்த ஒரு வருடமாக புயல் வீசியதாகவும் அதற்கு காரணம் யுவா படத்தில் யுவ ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்த நடிகை சப்தமி கவுடாவுடன் தனது கணவருக்கு ஏற்பட்ட நெருக்கம் தான் காரணம் என்றும் பகிரங்கமாகவே குற்றம் சாட்டி இருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற காந்தாரா படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் இந்த சப்தமி கவுடா.

இந்த நிலையில் யுவராஜ் குமாரின் மனைவி ஸ்ரீதேவி பைரப்பா தேவையில்லாமல் அவர்களது விவகாரத்து விஷயத்தில் தனது பெயரை இழுத்துள்ளதாகவும் தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாகவே அவர் இதை செய்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் நடிகை சப்தமி கவுடா.

யுவா படத்தில் யுவராஜ் குமாருடன் இணைந்து நடித்ததை தவிர தனக்கும் அவருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லாத நிலையில் இப்படி தன் மீது அபாண்டமாக பொதுவெளியில் ஸ்ரீதேவி பைரப்பா குற்றம் சுமத்தியுள்ளார் என்று கூறி இதற்காக அவர் தனக்கு பத்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் மேலும் தன்னைப் பற்றி இப்படி அவதூறாக பேசியதற்கு பொது வெளியில் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பைரப்பாவுக்கு நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்த வாரம்… 'டல்' ஆன வாரம்…இந்த வாரம்… 'டல்' ஆன வாரம்… ராணுவ படத்துக்காக சரத்குமாருடன் கைகோர்த்த மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் ராணுவ படத்துக்காக சரத்குமாருடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in