திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
சூப்பர் ஹிட் அடித்து வந்த தொடர் எதிர்நீச்சல். எதிர்பாராத வகையில் ஆதிகுணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து மரணமடைய, வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்தார். ஆனால், அவரது நடிப்பை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சீரியலுக்கு இருந்த வரவேற்பும் குறைந்ததால் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய வேல ராமமூர்த்தி, 'டிஆர்பியில் உச்சத்தில் இருந்த சீரியல் எதிர்நீச்சல் தான். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. ஆனால், இந்த சீரியலில் நான் ஏன் நடித்தேன் என்று தான் இப்போது நினைக்கிறேன். மக்கள் என்னை ஏற்றுக்கொள்ளவே இல்லை. மிகப்பெரிய அவமானமாகவே நான் இதை பார்க்கிறேன்' என வருத்தத்துடன் பேசியுள்ளார்.