பைரவா ஆந்தம் படப்பிடிப்பிற்கு வருகை தந்த பிரபாஸின் சகோதரிகள் | உங்களுக்கெல்லாம் எதுக்கு ஓட்டு : நன்றி சொல்ல வந்த இடத்தில் மக்களை திட்டித்தீர்த்த இயக்குனர் தங்கர் பச்சான் | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை : நடிகர் விஜய் கட்சி அறிவிப்பு | 'கல்கி 2898 ஏடி' விழா - பிரபாஸ், தயாரிப்பாளர் கருத்து மோதல்? | 'ரஜினி 172' அல்லது 'ரஜினி 173' - மீண்டும் 'பேட்ட' கூட்டணி | அம்மா சினேகா உடன் போட்டி போட்டு உடற்பயிற்சி செய்த விஹான் | கல்கி 2898 ஏடி - அமெரிக்க முன்பதிவில் 2 மில்லியன் வசூல் | ‛குகி' படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கும் தேவோலீனா பட்டாசார்ஜி | இடைவிடாமால் நடக்கப் போகும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு | சிம்புவிற்கு பிறகு தான் எனக்கு : திருமணம் குறித்த கேள்விக்கு ரேமா பதில் |
சூப்பர் ஹிட் அடித்து வந்த தொடர் எதிர்நீச்சல். எதிர்பாராத வகையில் ஆதிகுணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து மரணமடைய, வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்தார். ஆனால், அவரது நடிப்பை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சீரியலுக்கு இருந்த வரவேற்பும் குறைந்ததால் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய வேல ராமமூர்த்தி, 'டிஆர்பியில் உச்சத்தில் இருந்த சீரியல் எதிர்நீச்சல் தான். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. ஆனால், இந்த சீரியலில் நான் ஏன் நடித்தேன் என்று தான் இப்போது நினைக்கிறேன். மக்கள் என்னை ஏற்றுக்கொள்ளவே இல்லை. மிகப்பெரிய அவமானமாகவே நான் இதை பார்க்கிறேன்' என வருத்தத்துடன் பேசியுள்ளார்.