தினமும் நெல்லிக்காய் ஜூஸ், வாரத்துக்கு ஒரு தடவை அரிசி சாதம் : டயட் ரகசியம் சொல்லும் அருண்விஜய் | ஜெயிலர் 2வில் குத்தாட்டம் போடும் நோரா பதேகி யார் தெரியுமா? | முதல்வருடன் பாதிக்கப்பட்ட நடிகை சந்திப்பு: பலாத்கார வழக்கில் மேல்முறையீடு செய்ய கோரிக்கை | கேரள திரைப்பட விழாவில் திரையிட 19 படங்களுக்கு மறுப்பு : கேரளா அமைச்சர் காட்டம் | பாபி சிம்ஹாவின் புதிய படம் தொடங்கியது | பிளாஷ்பேக்: கருணாநிதி படத்தை எதிர்த்து எம்ஜிஆர் போட்ட வழக்கு | திலீப் விஷயத்தில் மோகன்லால் இப்படி செய்யலாமா? : நடிகை கேள்வி | பிளாஷ்பேக்: முதல் படத்திலேயே காதல், கல்யாணம், தாயின் மரணத்தை சந்தித்த நடிகை | 'கில்லி' ரீ ரிலீஸ் வசூலை முறியடிக்குமா 'படையப்பா' ? | தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் |

உலக அளவில் பெருமை மிகுந்த திரைப்பட விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் திரைப்பட விருதுகள். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள 98வது ஆஸ்கர் திரைப்பட விருதுகள் விழாவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள 'ஹோம்பவுண்ட்' திரைப்படத்தைத் தேர்வு செய்துள்ளனர். சிறந்த சர்வதேசத் திரைப்பட விருதுக்கான பிரிவில் அந்தப் படம் கலந்து கொள்ளும்.
இதுகுறித்து தேர்வுக்கான தலைவர் என் சந்திரா கூறுகையில், “இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதில் கலந்து கொள்ள பல மொழிகளிலிருந்து 24 படங்கள் போட்டியிட்டன. அவற்றில் ஒன்றைத் தேர்வு செய்தது சிரமமான ஒன்றாக இருந்தது. நாங்கள் நீதிபதிகள் அல்ல, கோச்கள். நாங்கள் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்வதில் இருந்தோம்,” என்றார்.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள், எடிட்டர்கள், பத்திரிகையாளர்கள் என 12 பேர் அடங்கிய குழு அந்தத் தேர்வில் இருந்தனர்.
நீரஜ் கய்வான் இயக்கத்தில் கரண் ஜோகர், அதார் பூனாவாலா தயாரிப்பில் உருவான 'ஹோம்பவுண்ட்' திரைப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெவாத்வா, ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர். அடுத்த வாரம் செப்டம்பர் 26ம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
வட இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தில் நடக்கும் கதை. சிறு வயது முதலே சிறந்த நண்பர்களான ஷோயிப் (இஷான் கட்டர்), ஒரு முஸ்லிம், மற்றும் சந்தன் (விஷால் ஜெத்வா), ஒரு தலித், ஆகியோர் வறுமை மற்றும் பாகுபாட்டிலிருந்து தப்பிக்க அரசு வேலைகளைப் பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். போலீஸ் வேலையில் சேர்வது தங்களுக்கு கண்ணியத்தை அளித்து பாரபட்சத்திலிருந்து பாதுகாக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், அவர்களின் விண்ணப்பங்களுக்கு ஒரு வருடம் கடந்தும் எந்த பதிலும் வராததால் அவர்களின் பயணம் நிச்சயமற்றதாக மாறுகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லும் படம் இது.




