சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான 'சிக்கந்தர்' படத்தை தொடர்ந்து சல்மான்கான் நடிப்பில் அடுத்து ஹிந்தியில் உருவாகி வரும் படம் 'பேட்டில் ஆப் கல்வான்'. கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இயக்குனர் அபூர்வா லகியா இந்த படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக லடாக் பகுதியில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 45 நாட்கள் அங்கே நடைபெற்ற படப்பிடிப்பில் சல்மான் கான் 15 நாட்கள் கலந்து கொண்டு நடித்தார்.
அதே சமயம் அங்கே நிலவிய அதிக குளிர் சீதோசன நிலை ஒரு பக்கம் பாதிப்பு என்றால் இன்னொரு பக்கம் படப்பிடிப்பின் போது சல்மான்கானுக்கு சின்ன சின்ன காயங்களும் ஏற்பட்டது. இதனால் ஒரு குறுகிய கால ஓய்வு எடுத்துக் கொண்டு சிகிச்சை பெறுவதற்காக மும்பை திரும்பியுள்ளார் சல்மான் கான். இதனைத் தொடர்ந்து விரைவில் மும்பையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. சிகிச்சை முடிந்த பிறகு இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சல்மான் கான் கலந்து கொள்ள இருக்கிறாராம்.