சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளம், ஹிந்தி என இரண்டு மொழிகளில் மாறி மாறி படங்களை இயக்கி வருகிறார். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக அவரை வைத்து கிட்டத்தட்ட 33 படங்களுக்கு மேல் இயக்கிவிட்டார் பிரியதர்ஷன். அதேபோல பாலிவுட்டில் பெரும்பாலும் நடிகர் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்த படங்களை இவர் இயக்கியுள்ளார். தற்போது கூட 'ஹைவான்' என்கிற படத்தை அக்ஷய் குமாரை வைத்து தான் இயக்கி வருகிறார்.
அதே சமயம் 2000 துவக்கத்தில் சல்மான்கானை வைத்து இரண்டு படங்களையும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தையும் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட போது, நிருபர் ஒருவர் இவரிடம் பத்மஸ்ரீ விருது கிடைத்ததை பெரிய சாதனையாக நினைக்கிறீர்களா என்று கேட்டபோது, “நிச்சயமாக இல்லை.. கோவிந்தாவும் சல்மான் கானும் இணைந்து நடித்த ஒரு படத்தை இரண்டு ஷெட்யூல்களுக்குள் என்னால் முடிக்க முடிந்தது. அதைத்தான் மிகப்பெரிய சாதனையாக நான் நினைக்கிறேன். காரணம் அவர்கள் சரியான நேரத்திற்கு படத்திற்கு வர மாட்டார்கள் என்று அப்போது பேச்சு இருந்தது.
ஆனால் இருவருமே பழகுவதற்கு இனிமையானவர்கள். என்னுடைய படப்பிடிப்பிற்கு காலை 7 மணிக்கே வந்து விடுவார்கள். ஆனால் அப்போது சல்மான்கான் என்னிடம், “சார் நீங்கள் என்னை வைத்து அடுத்த படத்தை இயக்கினால் நிச்சயமாக நான் செட்டுக்கு காலை 5 மணிக்கெல்லாம் வரமாட்டேன்” என்று கூறியதாக சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.