அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் | காந்தாரா 2ம் பாகத்தை கேரளாவில் வெளியிடும் பிரித்விராஜ் | லோகா படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆனது ஏன் ? ; இயக்குனர் பஷில் ஜோசப் | என்னை முதலில் ஆடிசன் செய்தது மம்முட்டி தான் ; மாளவிகா மோகனன் |
சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகள், மற்றும் தொடர்கள் மூலம் புகழ் பெற்றவர் நாஞ்சில் விஜயன். இவர் மீது சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த திருநங்கை வைஷூலிசா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இவரும் சின்னத்திரையில் நடித்து வருகிறவர்.
அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: நான் 15 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருகிறேன். நானும், சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்தார். இதனால் நாங்கள் இருவரும் கணவன், மனைவி போன்று வாழ்ந்து வந்தோம். தற்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து வருகிறார். அவர் அளித்த உறுதிமொழியின் அடிப்படையிலேயே அவரது ஆசைக்கு இணங்கி வந்தேன். நான் திருநங்கை என்பது தெரிந்துதான் அவர் என்னை காதலித்தார். நான் தற்போது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருகிறேன். என்னை ஏமாற்றிய நாஞ்சில் விஜயன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் அவர் கூறியுள்ளார்.