பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

திரைப்படத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, இந்த ஆண்டு மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலுக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. டில்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் விருது பெறுவதற்காக டில்லி புறப்பட்டபோது நேற்று கொச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் மோகன்லால் கூறியதாவது: தாதா சாகேப் பால்கே விருது எனக்கு அறிவித்து இருப்பது, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனது 48 ஆண்டு கால திரையுலக அனுபவத்தில், எனக்கு கிடைத்த மிக உயர்ந்த அங்கீகாரமாக இந்த விருதை கருதுகிறேன்.
பல சாதனையாளர்கள் நடந்து சென்ற வழியில், நானும் தொடர்ந்து செல்கிறேன். நான் பணிபுரியும் சினிமா தொழில் தான் எனக்கு தெய்வம். அதே தெய்வம் தான் இந்த விருதை வழங்கி உள்ளதாக கருதுகிறேன். செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு நான் என்றும் மதிப்பளிக்கிறேன்.
தொழிலில் நாம் காட்டும் அக்கறையும், நேர்மையும், திறமையும் மட்டுமே நம்மை உயர செய்யும். இந்த விருது மலையாள திரைப்பட உலகிற்கு கிடைத்ததாக கருதி, மலையாள திரையுலகிற்கு சமர்ப்பிக்கிறேன். அதோடு அனைத்து நடிகர்களுடன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எல்லோருடன் இணைந்து நடித்ததால் தான் மோகன்லால் என்ற ஒரு நடிகர் உருவானார். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.