தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியானது. இந்த படம் கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் அதே அளவு வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 250 கோடி வரை வசூலித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு உண்மை சம்பவத்தை படமாக்கியது ஒரு காரணம் என்றாலும் கமலின் குணா படத்தின் மூலம் புகழ்பெற்ற குணா குகையில் காட்சிகளை படமாக்கியதும், குணா படத்தில் இடம்பெற்று கண்மணி அன்போடு என்கிற பாடல் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு, குறிப்பாக கிளைமாக்ஸில் நட்பின் ஆழத்தை உணர்த்துவதற்காக பயன்படுத்தப்பட்ட விதத்தில் ரசிகர்களை கவர்ந்தது,
படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்தப் படத்தில் குணா பாடலின் உரிமையை தன்னிடம் இருந்து முறையாக பெறாமல் பயன்படுத்தியுள்ளார்கள் என்று மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சமீப காலமாக அவர் இப்படி தனது பாடல்களின் காப்பிரைட்ஸ் சம்பந்தமாக பல நடவடிக்கைகள் எடுத்து வருவதால் அதில் ஒன்றாக தான் இதுவும் பார்க்கப்படுகிறது.
அதேசமயம் குணா படத்தின் நாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படக்குழுவினர் இளையராஜாவை மரியாதையை நிமித்தமாக கூட சந்திக்கவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷாம் ஆண்டனி இதுகுறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “குணா படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை தங்களிடம் வைத்துள்ள இரண்டு நிறுவனங்களிடமிருந்து முறைப்படி அனுமதி பெற்று தான் இந்த பாடலை நாங்கள் படமாக்கி உள்ளோம். ஆனால் இளையராஜாவோ இந்த பாடலின் முதல் உரிமைதாரர் நான் தான்” என்கிற விதமாக எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்று கூறியுள்ளார்.