சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மும்பையைச் சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார் ஸ்ருதிஹாசன். அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தவர் தொடர்ந்து அவருடன் தான் எடுத்துக் கொள்ளும் நெருக்கமான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் திடீரென்று சாந்தனுவை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்வதை நிறுத்தினார். இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து ஸ்ருதிஹாசனின் பிறந்த நாளுக்கும் சோசியல் மீடியாவில் சாந்தனு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது அவர்களது பிரேக்அப்பை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஸ்ருதிஹாசனிடம் ரசிகர்கள், தற்போது நீங்கள் சிங்கிளா? கமிட்டடா? என்று கேட்டார்கள். அதற்கு ஸ்ருதிஹாசன், நான் சிங்கிள்தான் மிங்கிளாக விரும்பவில்லை. என்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். அதில் சந்தோஷமாக இருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு ஒரு பதில் கொடுத்து இருக்கிறார்.