20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
ரஜினி தனது 170வது படமான 'வேட்டையன்' படப்பிடிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு முடித்தார். அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சில நாட்கள் அபுதாபியில் அவர் ஓய்வெடுக்க இருக்கிறார்.
இதற்காக நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து காலை 11 மணியளவில் எத்தியாட் விமானம் மூலம் அபுதாபி புறப்பட்டு சென்றார். விமான நிலையத்திற்கு எப்போதும் போல உற்சாகமாக வந்தார். கருப்பு பேண்டும், வெள்ளை டிசர்ட்டும் அணிந்து எளிமையாக வந்த அவர், சுற்றி இருந்தவர்களை பார்த்து புன்னகை செய்தபடி சென்றார். தனக்கு உதவ வந்த விமான நிலைய ஊழியரின் தோள்மீது கைபோட்டபடி சென்றார்.
இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்களுடன் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.