இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
வெளிநாட்டில் செட்டிலான பாடகியும், ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா தற்போது இந்தியா திரும்பி முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்றும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு விளக்கம் அளித்து கார்த்திக் குமார் ஒரு ஆடியோ வெளியிட்டார் அதி "நீ அசிங்கமாக பேசுகிறாய், இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுகிறாய். நீ ஏன் இந்த மாதிரி பேசுகிறாய். உன் வளர்ப்பு அப்படியில்லயே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதானா, நல்ல ஆச்சாரமான பேமிலில இருந்துதான வந்த..." என்று பேசியிருந்தார். தற்போது இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்திக்குமாரின் பேச்சு பட்டியலின பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை சைபர் கிரைம் போலீசுக்கு அனுப்பிய ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல. நான் ஒரு போதும் அப்படி பேசுபவன் அல்ல என்று கார்த்திக் குமார் கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்னை தொடர்பாக சென்னை மயிலாப்பூர் துணை ஆணையரிடம் அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல என புகார் மனு அளித்துள்ளார் கார்த்திக்.