இது இரண்டாவது சுதந்திர போர் : ரசிகர்களின் கவனம் பெறும் ‛இந்தியன் 2' டிரைலர் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர் | ஆங்கிலத்தில் டப் ஆகும் மாநாடு | கார்த்தி படத்தில் ஆஷிகா ரங்கநாத் | காதல் எமோஜிகளை பதிவு செய்த நிவேதா தாமஸ் | தொடர்ந்து திரைப்பட விழாக்களுக்கு செல்லும் ஏழு கடல் ஏழு மலை படம் | 10 நாட்களில் ரூ. 81 கோடி வசூலை எட்டிய மகாராஜா | பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நஸ்ரியாவை சந்தித்த நயன்தாரா | கங்கனாவின் எமர்ஜென்சி செப்., 6ல் ரிலீஸ் | நாம் இல்லாமல் ஊழல்கள் நடக்குமா? - கமல் கேள்வி |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பணி மீண்டும் தீவிரமாகி உள்ளது. கடந்தமுறை நாசர் தலைமையிலான அணியினர் பொறுப்பேற்ற பிறகு இந்த பணிக்கான பூஜைகள் நடந்து அதன்பின் பணிகள் மும்முரமாய் நடந்து வந்தன. பின்னர் ஏற்பட்ட நிதி தட்டுப்பாடு, நடிகர் சங்க தேர்தல் வழக்கு போன்ற பிரச்னையால் பணிகள் நின்று போகின. மீண்டும் நாசர் அணியினர் பொறுப்பேற்ற பின்னர் இந்த பணி தற்போது முழு வீச்சில் துவங்கி உள்ளன.
சங்க கட்டடம் கட்ட கமல், உதயநிதி, விஜய் ஆகியோர் தலா ஒரு கோடி நிதி வழங்கினர். நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் நிதி வழங்கினார். இவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் ரூ.1 கோடி நிதி வழங்கி உள்ளார். இதற்காக தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் தனுஷிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.