'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் | போதை பார்ட்டியில் கலந்து கொண்டேனா? : நடிகர் ஸ்ரீகாந்த் விளக்கம் | சம்பளம் கேட்டால் மிரட்டுகிறார் : தயாரிப்பாளர் மீது நடிகை பாயல் புகார் |
ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்கள் மற்றும் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து தன்னுடைய சோசியல் மீடியாவில் கிளாமர் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் திருவண்ணாமலை கோயிலுக்கு தான் சென்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ள ரம்யா பாண்டியன் அதன் பயனாக தனது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களை தெரிவித்திருக்கிறார்.
அந்த பதிவில், திருவண்ணாமலை எப்பொழுதுமே என்னுடைய இதயத்தில் ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறது. காரணம் என் வாழ்க்கையை மாற்றிய கோயில் இதுதான். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை ஒவ்வொரு மாதமும் நான் கிரிவலம் சென்றேன். இந்த கோயில் என்னுடைய ஆன்மிக தொடர்பை குறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. நான் சொல்லும் ஒவ்வொரு கோயிலும் தெய்வீக அழைப்பாக உணர்கிறேன். இந்த பயணத்தால் உண்மையிலேயே நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.