பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை ஷோபிதா துலிபாலா. மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த குரூப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீப நாட்களாக நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஷோபிதா துலிபாலாவும் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம் இந்த வருடத்தில் கட்டாயம் பார்க்க வேண்டும் என்கிற மூன்று படங்களை பட்டியலிடுங்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், மஞ்சும்மேல் பாய்ஸ் மற்றும் தான் நடித்துள்ள மங்கி மேன் ஆகிய படங்களை குறிப்பிட்டார். மேலும் மம்முட்டியின் பிரம்மயுகம் படம் பற்றி தான் நிறைய கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அந்த படத்தை தனியாக பார்ப்பதற்கு எனக்கு ரொம்பவே பயமாக இருக்கிறது. நிச்சயமாக இரண்டு மூன்று பேரை என்னுடன் சேர்த்துக் கொண்டு தான் பிரம்மயுகம் படத்தை பார்ப்பேன். அப்போது தான் பயம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.