நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் |
கடந்த சில நாட்களாகவே பின்னணி பாடகி சுசித்ராவின் பேட்டிகள் மூலமாக தமிழ் திரையுலகில் நடைபெற்று வரும் திரையுலக பிரபலங்களின் பார்ட்டி கலாச்சாரங்கள் பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் இதே போன்று ஒரு பார்ட்டி நடைபெற்றது என்றும் அதில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார் என்றும் செய்தி வெளியானது. போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலின்படி போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்த பார்ட்டி தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அதில் தான் நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார் என்று சொல்லப்பட்டது.
தெலுங்கு திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வரும் ஸ்ரீகாந்த் தமிழில் விஜய் நடித்த வாரிசு படத்தில் அவரது மூத்த சகோதரராக நடித்திருந்தார். தற்போது தேவரா, கேம் சேஞ்சர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படி வெளியான செய்தி குறித்து மறுத்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த்.
“இது போன்ற ஒரு செய்தியை பார்த்து முதன்முதலாக நானும் என் குடும்பத்தாரும் வாய்விட்டு சிரித்தோம். இதோ நான் வீட்டின் முன்பாக தான் நின்று கொண்டிருக்கிறேன். எப்படி என் பெயரை பயன்படுத்தி இப்படி ஒரு செய்தி வெளியானது என்று தெரியவில்லை. செய்தி வெளியிடுவதற்கு முன் என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதன்பின் வெளியிட்டு இருக்கலாம்.
ஒருவேளை அந்த பார்ட்டியில் பிடிபட்ட நபர் என்னை போன்ற சாயல் கொண்டவர் என்பதால் கூட இப்படி ஒரு செய்தி பரவ ஆரம்பித்ததோ என்னவோ ? என்றாலும் கூட அந்த நபர் தாடி வைத்திருக்கிறார். எனக்கு இது போன்ற பார்ட்டி கலாச்சாரம் என்றால் என்னவென்று தெரியாது. ஆனாலும் பல யு-டியூப் சேனல்களில் இந்தப் பார்ட்டியில் என்னை இணைத்து தவறான செய்திகள் வெளியாவதால் அதற்காகவே இந்த விளக்கத்தை அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.